Thursday, March 13, 2008

தேங்காய் அரிசி தோசை

புழுங்கல் அரிசி 2 ஆழாக்கு
தேங்காய் 1
உளுத்தம்பருப்பு 1 பிடி
----

அரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாகவே ஊறவைக்கவும். நான்கு மணிநேரம் நன்றாக ஊறியபின், களைந்து கல் இல்லாமல் எடுத்துப்போட்டு மசிய அரைக்கவேண்டும். ஒரு முழுத்தேங்காயையும் துருவி எடுத்து, சிறிது உப்பும் சேர்த்து மீண்டும் நன்கு அரைக்கவும். காலையில் தோசை ஊற்றவேண்டும் என்றால், முதல் நால் இரவே மாவினை தயாரித்து வைத்துவிடவும். தோசைக்கல்லில் எண்ணெய்த் தடவி ஊற்றி எடுக்கவும்.

No comments: