Saturday, May 09, 2009

நிலவில் உலாவரும் நேயர்களுக்கு சமைப்போம் சுவைப்போம் என் குரல் பதிவில்.


Get this widget | Track details | eSnips Social DNA



Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, September 09, 2008

முட்டை பொடிமாஸ்
---------------

தேவையான பொருட்கள்
முட்டை - 2
சின்ன வெங்காயம் - 6
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவுஉளுந்து - 1/4
தேக்கரண்டிசீரகம் - 1/4
தேக்கரண்டிஎண்ணெய் - 2
தேக்கரண்டிஉப்பு, மஞ்சள் தூள் - தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் 1 தேக்கரண்டி தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூளைப் போட்டு நன்றாகக் கரைத்துக் கொள்ளவும். அதில் 2 முட்டையை உடைத்து ஊற்றிக் கரண்டியால் நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்.. சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பின் மீது அடி கனமான ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், உளுந்து, சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் அதில் போட்டுப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றிக் கரண்டி போட்டு கிளறவும். முட்டை வெந்ததும் சிவப்பதற்கு முன் இறக்கவும்.

Thursday, March 13, 2008

ஆரஞ்சு மில்க் கிரீம்

ஆரஞ்சுபழம் 2
பால் ஒரு கப்
சர்க்கரை 3 மேசைக்கரண்டி
வெனிலா ஐஸ்கிரீம் 4 கப்
எலுமிச்சம்பழம் 1

ஆரஞ்சுபழத்தின் தோல் உரித்து, விதைகளை நீக்கி எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சம்பழத்தினை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். ஆரஞ்சு சுளைகளுடன் எலும்மிச்சை சாற்றினை கலந்து மிக்ஸியில் , நன்கு அடித்துக் கலக்கி கொள்ளவும். இதனுடன் சர்க்கரையையும், பாலையும் கலந்து நன்கு கலக்கி, பிறகு ஐஸ்கிரீமை இதனுடன் சேர்த்து நன்கு நுரை வரும் வரை கலக்கிக் கொள்ளவும்.
தேங்காய் அரிசி தோசை

புழுங்கல் அரிசி 2 ஆழாக்கு
தேங்காய் 1
உளுத்தம்பருப்பு 1 பிடி
----

அரிசி, உளுந்து இரண்டையும் ஒன்றாகவே ஊறவைக்கவும். நான்கு மணிநேரம் நன்றாக ஊறியபின், களைந்து கல் இல்லாமல் எடுத்துப்போட்டு மசிய அரைக்கவேண்டும். ஒரு முழுத்தேங்காயையும் துருவி எடுத்து, சிறிது உப்பும் சேர்த்து மீண்டும் நன்கு அரைக்கவும். காலையில் தோசை ஊற்றவேண்டும் என்றால், முதல் நால் இரவே மாவினை தயாரித்து வைத்துவிடவும். தோசைக்கல்லில் எண்ணெய்த் தடவி ஊற்றி எடுக்கவும்.
பாதுஷா

தேவையானப் பொருட்கள்
மைதா - அரைக் கிலோ
உருக்கின டால்டா - 200 கிராம்
தண்ணீர் - 300 மில்லி
லெமன் சால்ட் - கால் தேக்கரண்டி
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
பாகு காய்ச்ச:சீனி - அரைக்கிலோ
தண்ணீர் - கால் லிட்டர்
---

மைதா மாவினை சலித்து எடுத்து ஒரு அகன்ற தட்டு அல்லது தாம்பாளத்தில் கொட்டி, மாவின் நடுவில் குளம் போல் குழி செய்து கொள்ளவும். அதில் சோடா உப்பு, லெமன் சால்ட், தண்ணீர், டால்டா ஊற்றி மாவினை ஒன்று சேர இரண்டு கைகளாலும் நன்கு பிசையவும்.

மாவை நன்கு அடித்து பிசைந்து புரோட்டா மாவு பதத்திற்கு கொண்டு வரவும். மாவு பதம் முக்கியம். பிசைந்த மாவினை ஊற விடவேண்டிய அவசியம் இல்லை. பின்னர் அந்த மாவினை உருளையாக உருட்டி, எலுமிச்சையை விட கொஞ்சம் பெரிய அளவிற்கு துண்டங்களாக கிள்ளிப் போடவும்.

இனி பாதுஷா வடிவத்திற்கு மாவினை உருட்டி பின்ன வேண்டும். அதற்கு, கிள்ளிய மாவினை ஒவ்வொன்றாய் கையில் எடுத்து உருண்டையாக உருட்டி, இரண்டு உள்ளங்கைககளுக்கு நடுவில் வைத்து, அழுத்தி தட்டையாக்கிக் கொள்ளவும். மிகவும் மெல்லிய தட்டையாக இருக்கக் கூடாது.

இப்போது பின்னுதல் முக்கியமான அம்சம். தட்டிய மாவினை விரல்களில் எடுத்து, ஒரு கையின் கட்டை விரலினால் சற்று குழிவாக கிண்ணம் போல் வருமாறு அழுத்திப் பிடித்து, மற்றொரு கையின் கட்டை விரலால் மடித்து விட்டு, விரல் நகத்தால் சற்று அழுத்தி விடவும்

பாதுஷாவை திருப்பி, உள்ளங்கையில் வைத்து, மத்திய பாகத்தில் ஒரு விரலால் லேசாக அழுத்தவும். இது பின்புறம் லேசாக குழி போன்று தோற்றம் உண்டாக்கும். முன்புறத்தின் மையப் பகுதி சற்று முன்நோக்கி வந்திருக்கும். இப்படியே அனைத்து மாவையும் பாதுஷாக்களாக தயார் செய்யவும்

அடுத்து ஜீரா காய்ச்ச வேண்டும். அரைக்கிலோ சீனிக்கு கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும்.
முதலில் ஒரு கொதி வந்தவுடன் 100 மில்லி பால் ஊற்றவும். பால் ஊற்றியதும் அழுக்குகள் அனைத்தும் திரண்டு பாகின் மீது மிதக்கும். அவற்றை சாரணி கொண்டு எடுத்துவிடவும். சுமார் 10 நிமிடங்கள் பாகு கொதிக்கவிட்டு, கையில் ஒட்டும் பதம் வந்தவுடன் இறக்கி, ஆறவிடவும்பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.

எண்ணெய் காய்ந்ததும் அதில் சிறிது மாவை உருட்டிப் போட்டால் எண்ணெய்யில் பொரிப்பொரியாய் வரவேண்டும். அந்த அளவு சூட்டில் வாணலியை அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். எண்ணெய் மிகவும் சூடாகிவிடக்கூடாது. இப்போது தயார் செய்து வைத்துள்ள பாதுஷாக்களை எண்ணெய் தெறிக்காதவாறு எச்சரிக்கையாய் வாணலியில் போடவும்.

நன்கு கவனிக்கவும். இதனை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து செய்யவேண்டும். பாதுஷாக்கள் அனைத்தும் எண்ணெய்யின் அடியில் சென்று தங்கிவிடும். இப்போது ஒரு சாரணியால் எண்ணெய்யை மேலும், கீழும் விடாது அழுத்தினால், பாதுஷாக்கள் பொரிந்து, வெண்ணிறமாகி மேல் நோக்கி வந்து மிதக்கும். அனைத்து பாதுஷாக்களும் மேலே வரும் வரை அவ்வாறு செய்யவும்.

வெண்ணிறமாய் பாதுஷாக்கள் மேலே வந்து மிதக்க ஆரம்பித்த பிறகு, வாணலியை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் வேகவிடவும். அதிக தீ கூடாது. சுமார் 15ல் இருந்து 20 நிமிடங்கள் வேகவேண்டும். பாதுஷா நன்கு வெந்து, பொன்னிறமாக படத்தில் காட்டியுள்ளபடி மாறியதும், சாரணி கொண்டு அரித்து எடுத்து, எண்ணெய் வடிகட்டியில் போட்டு எண்ணெய் வடிய விடவும்


எண்ணெய் முழுவதும் வடிந்தவுடன், சீனிப் பாகும் சற்று ஆறியதும், பாதுஷாக்கள் அனைத்தையும் சீனிப் பாகில் போட்டு 5 நிமிடங்கள் ஊறவிடவும். சீனிப் பாகு இறங்கி பாதுஷாக்கள் நன்கு மிருதுவானவுடன் எடுத்து தனியே வைக்கவும். மேலே சிறிது பாகினை ஊற்றி விடலாம். இப்போது அதீத சுவையான பாதுஷா தயார்.




ஆட்டு இறச்சி வடை

ஆட்டு இறச்சி 250 கிராம்
வெங்காயம் 2
செத்தல் மிளகாய் 8 கறுவா சிறியதுண்டு
பூண்டு 10 பல்
தேங்காய் (துருவியது) ஒரு கப்
பொட்டுக்கடலை 2 மேசைக்கரண்டி
பெருஞ்சீரகம் நற்சீரகம் 1மேசைக்கரண்டி
உப்பு எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

இறச்சியைக்கழுவிக்கொள்ளவும்பின்
இறச்சியுடன் மிகுதிப்பொருற்களைப் போட்டு
அரைத்து சிறிய சிறிய வட்டமாக தட்டி பொரித்து எடுக்கவும்.

Friday, March 30, 2007

எனக்குப் பிடித்த பழைய பாடல்களை எனது கவிதைகளுடன் கேட்க கீழ்வரும் இணைப்புகளை அழுத்துங்கள்... [NEW]

என்றும் இனியவை-1

என்றும் இனியவை-2

இசையும் கதை கவிதைகள் சிறுகதை என் குரலில் கேட்க இங்கே.அழுத்தவும்
http://clearblogs.com/piriyaa/

இனிப்பு சட்னி

பேரீச்சம் பழம் 250 கிராம்
கெட்டியான புளிச்சாறு ஒரு கப்
வெல்லம் அரை கப்
சீரகம் ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் 2 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு

பேரீச்சம்பழத்தின் விதைகளை நீக்கிக் கொள்ளவும். சீரகத்தையும், பேரீச்சம்பழத்தையும் ஓரளவு வறுத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். மற்ற எல்லாப் பொருட்களையும் அரைத்த விழுதோடு சேர்த்து ஒரு கப் தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.


Saturday, October 14, 2006

பற்றீஸ்




தேவையான பொருள்கள்.

கோதுமை மா..250கிராம்
அவித்த கோதுமைமா..150 கிராம்
உப்பு தேவையான அளவு
மஞ்சல் தூள் ஒரு சிட்டிகை

உருழைக்கிழங்கு 500 கிராம்
வெங்காயம் 2 பெரியது
பச்சை மிளகாய் 4
தனி மிளகாய் தூள் 1 மேசைக்கறண்டி
கறிவேப்பிலை தேவையான அளவு
கடுகு பெருஞ்சீரகம் தாளிப்பதற்கு தேவையான அளவு
பொரித்தெடுக்க தேவையான அளவு எண்ணெய்

செய் முறை.

இருவகை மாவுடன் மஞ்சல் உப்பு ஒரு மேசைக்கறண்டி எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அதன் பின் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவின் பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.

அடுத்தபடியாக.

உருழைக்கிழங்கை அவித்து தோள் அகற்றி அதை நல்ல சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

வெங்காயம் பச்சமிளகாயை சிறிய துண்டாக வெட்டிக்கொள்வும்

அகண்ற பாத்திரத்தில் தாளிப்பதற்கு சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு போட்டு வெடித்தவுடன் சீரகம் வெட்டிய வெங்காயம் மிளகாயைப் போட்டுபொன்னிறமாக வதங்கியதும் கறிவெப்பிலை போட்டு அதனுடன் மளகாய் துளைசேர்த்து கிளறி உடனே வெட்டிய கிழங்கு உப்பு சேர்த்து அடுப்பின் வெக்கையை நன்கு குறைத்து கிளறி இறக்கவும்.

பின்பு.

பிசைந்த மாவை சிறிய உறுண்டையாக்கி அதை கொலுக்கட்டை வடிவில் எடுத்து அதனுள் உருழைக்கிழங்கை வைத்து (செய்த கறி) நன்கு மூடவேண்டும் அகண்ற பாத்திரத்தில் எண்ணெய் கொதித்ததும் செய்த எடுத்த பற்றீசை பொன் நிறத்தில் பொரித்தெடுக்கவும்.

இதிள் உள்ள படம் நான் செய்து எடுத்த படம்



சமையல் கலையில்

ராகினி

Thursday, September 28, 2006




சிக்கன் கறி.




தேவையான பொருட்கள்.

*1 கிலோ கோழி இறைச்சி

*3 பெரிய வெங்காயம்

*5 பல் பூண்டு

*2தக்காளிப்பழம்

*1 மேசைக்கரண்டி மிளகாத்தூள்

*1 தேக்கரண்டி மசலாத்தூள்

*3 தேக்கரண்டி தயிர்

*இஞ்சி சிறியதுண்டு

*தேவையான அளவு எண்ணெய்

*தேவையான அளவு உப்பு.

செய்முறை.

கோழியை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பூண்டு இஞ்சியை அரைத்துக் கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தையும் வெட்டிக் கொள்ளவும்.

தயிரைக் நன்றாக கரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, வெங்காயம், தக்காளி இரண்டையும் சேர்த்து பொன்நிறமாக வதக்கவும். பின்பு அதனுடன், அரைத்த இஞ்சி பூண்டையும் சேர்த்து வதைக்கிக் கொள்ளவும். பின் கோழி இறைச்சி, தயிர், மிளகாய்த் தூள், உப்பு மசலாத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து, தயிர்வற்றும் வரை அவியவிட்டு இறக்கவும்.

வித்தியாசமான சுவையுடன் அருமையாக இருக்கும்.



Thursday, September 21, 2006

தக்காளி சட்னி

நல்ல..தக்காளி 4 மிளகாய்
வற்றல் 5
கறிவேப்பிலை சிறிது
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு 1 தேக்கரண்டி
பூண்டு 4 பல்
----
மிளகாய் வற்றலை முதலில் மிக்சியில் அரைத்து கொண்டு பிறகு தக்காளியையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு, கடுகு வெடித்தவுடன் பூண்டை நன்கு மசித்து போடவும்.
அரைத்த தக்காளியை அதில் ஊற்றி, கறிவேப்பிலையையும் சேர்க்கவும்.
கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். இட்லி, தோசை மற்றும் பொங்கலுடன் சாப்பிடலாம். சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்.
நல்ல புளி உள்ள தக்காளி கிடைக்கவில்லை என்றால் சிறிது புளி சேர்த்து கொள்ளவும்.
வாழைப்பழ பக்கோடா

வாழைப்பழம் 2
கடலை மாவு 4 மேசைக்கரண்டி
பெருங்காயம் ஒரு சிட்டிகை
மஞ்சள்தூள் கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணெய்

கடலை மாவுடன் பெருங்காயம் மஞ்சள்தூள் .மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் கலந்து இட்லி மாவு பதத்திற்கு கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். வாழைப்பழத்தைத் தோலுரித்து அரை அங்குல கனத்திற்கு வட்டமான துண்டுகளாக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, சிறிது எண்ணெய் ஊற்றிக் கொதிக்கவிடவும். கரைத்த மாவில் வாழைப்பழத் துண்டுகளை தோய்த்து எடுத்து வாணலியில் கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.